• Sat. Apr 18th, 2026

24×7 Live News

Apdin News

குளத்து நீருக்கடியில் சினிமா பாணியில் 5 மணி நேரம் பதுங்கிய ஒருவரை போலீஸ் பிடித்தது எப்படி?

Byadmin

Apr 18, 2026


'5 மணிநேரம் குளத்துக்கு அடியில் தாமரைத் தண்டு மூலம் சுவாசித்தேன்' - திருடன் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

குளத்தில் நீருக்கடியில் ஐந்து மணிநேரமாக ஒளிந்திருந்த ஒருவரை காவல்துறையினர் ஒருவழியாக பிடித்துவிட்டனர்.

காவல்துறையினரிடம் இருந்து பிடிபடாமல் இருக்க நீருக்கடியில் மறைந்திருந்த அவர், தாமரை தண்டு வாயிலாக சுவாசித்தார்.

எனினும், அவரது தந்திரம் அனுபவம், பொறுமை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மீறிச் செல்லவில்லை.

ரயில்வேயால் மிகவும் தேடப்பட்ட நபரான, சுமார் 400 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் அந்த நபர் பிடிபட்டது எப்படி?

ஏப்ரல் 7 அன்று மாலை சுமார் 5 மணியளவில், கிதௌலா (Khitaula) ரயில்வே நிலையத்திலிருந்து ஓடிய நபர் ஒருவரை, ரயில்வே பாதுகாப்பு படையினர் துரத்தினர். சிறிது நேரத்தில் அந்நபர் அருகிலிருந்த குளம் ஒன்றில் குதித்துவிட்டார்.

By admin