• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

கெம்ப்ஸ் ரிட்லி கடல் ஆமை: விமானத்தில் 8,000 கி.மீ பயணித்து அமெரிக்கா செல்லும் அரிய ஆமை – காரணம் என்ன?

Byadmin

Aug 10, 2026


அரிய வகை ஆமை, கரீபியன் கடல், மெக்சிகோ வளைகுடா

    • எழுதியவர், கிறிஸ் டியர்டன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வேல்ஸ் கடற்கரையில் ஒதுங்கிய அரிய வகை கடல் ஆமை ஒன்று 8,047 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதன் இயற்கையான வாழிடமான மெக்சிகோ வளைகுடாவிற்கு விமானம் மூலம் மீண்டும் கொண்டு செல்லப்படுகிறது.

‘ரோஸ்ஸி’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கெம்ப்ஸ் ரிட்லி கடல் ஆமை, 2023 டிசம்பரில் உயிரிழக்கும் நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கடல் உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதற்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து, அதன் உடல்நிலையை மீட்டுள்ளனர்.

தற்போது, பாதுகாப்பு ஆர்வலர்கள் அதை அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து விமானத்தில் பத்திரமாகக் கொண்டு செல்லும் நடவடிக்கையை மிகவும் கவனமாக ஒருங்கிணைத்துள்ளனர். பயணத்தின்போது அதன் உடல் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வதே முக்கியச் சவாலாக உள்ளது.

“அதன் சருமத்துக்கு, பாலியல் உறவின்போது பயன்படுத்தப்படும் வழுவழுப்பூட்டியான கே.ஒய். ஜெல்லைப் பயன்படுத்துகிறோம். அது கண்களுக்கு எரிச்சல் அல்லது பாதிப்பை ஏற்படுத்தாத மென்மையான பொருள் என்பதால் அதைப் பயன்படுத்துகிறோம்” என்று ஆங்கிள்சி கடல் உயிரியல் பூங்காவின் பொறுப்பாளர் மேட் டேவிட்சன் கூறினார்.

அரிய வகை ஆமை, கரீபியன் கடல், மெக்சிகோ வளைகுடா

பட மூலாதாரம், Anglesey Sea Zoo

படக்குறிப்பு, பயணத்திற்கு முன்னதாக ரோஸ்ஸிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது

இதற்கான திட்டமிடலுக்கு மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. ரோஸ்ஸிக்காக வெப்பநிலையை கட்டுப்படுத்தக்கூடிய சிறப்பு பெட்டியை உருவாக்குவதும், இரண்டு நாடுகளுக்கு இடையிலான சிக்கலான ஆவண நடைமுறைகளை ஒருங்கிணைப்பதும் இந்தப் பணியில் அடங்கியிருந்தன.

By admin