சி.ஐ.டி. விசாரணை:
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.ஐ.டி. (CID) இந்த முன்று உறுப்பினர்களுக்கும் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து இந்த ராஜினாமாக்கள் நிகழ்ந்துள்ளன.
ஜே.எம்.எம். (JMM) கட்சியின் தலைவர் சுப்ரியோ பட்டாச்சார்யாவின் மனைவியான பட்டாச்சார்யாவிடம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், அகமதுவிடம் ஆகஸ்ட் 12-ஆம் தேதியும், ஹன்ஸ்டாவிடம் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முன்று உறுப்பினர்களும் செப்டம்பர் 2021-இல் அப்பதவிகளில் நியமிக்கப்பட்டனர். முன்னதாக, ஜூலை 22-ஆம் தேதியன்று JPSC தலைவர் எல். கியாங்டே (L Khiangte) தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து இருந்தார்.