அமெரிக்காவை சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் அந்தோனி ஃபாசியின் முன்னாள் ஆலோசகர் ஒருவர், ஆராய்ச்சி நிதி மானியங்களை பெறுவதற்காக கொரோனா பெருந்தொற்று தொடர்பான அரசாங்க ஆவணங்களை மறைத்து சதித்திட்டம் தீட்டிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கொரோனா ஆராய்ச்சி
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தில் (Niaid) ஃபாசி என்பவரின் கீழ் மூத்த அதிகாரியாக டேவிட் மோரன்ஸ் என்பவர் பணியாற்றினார்.
78 வயதான டேவிட், கொரோனா ஆராய்ச்சி மானியங்கள் தொடர்பாக ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்த பொது ஆவண கோரிக்கைகளை முறியடிக்கும் ஒரு திட்டத்தை தீட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.