இவிஎம்-க்கு பிறகு சட்டத்திருத்தம் இல்லை
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 100ன் படி இந்தெந்த காரணங்களுக்காகத்தான் தேர்தலை தள்ளுப்படி செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இல்லை என்றால், பழுதடைந்திருந்தால் தேர்தலை தள்ளுபடி செய்யலாம் என்ற காரணம் சொல்லப்படவில்லை.
ஏனென்றால் அது 1951ல் இயற்றப்பட்ட சட்டம். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, அந்த சட்டம் திருத்தம் செய்யப்படவில்லை. இரண்டாவதாக அரசியல் அமைப்பு சட்டம், எல்லா தேர்தல் வழக்குகளையும் தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்ய முடியும் என்று சொல்லி சொல்லியிருக்கிறது.