• Mon. Sep 7th, 2026

24×7 Live News

Apdin News

சட்டப்பேரவையில் விஜய் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு ஏன்? அமளி, வெளிநடப்பு என நடந்தது என்ன?

Byadmin

Sep 7, 2026


தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு முதல்வர் விஜய் பதிலுரை

பட மூலாதாரம், CMO

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று உரையாற்றினார். தனது உரையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், அவதூறு பேச்சுகள் மற்றும் திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக விமர்சனங்கள் செய்வது இயல்பானது என்றாலும், தனிப்பட்ட முறையிலும் பெண்களைப் பற்றியும் அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விஜய் கூறினார்.

தனக்கு மக்கள் வழங்கிய வெற்றியையும் பெறுவதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றும், அவர்களை இழிவுபடுத்தும் கருத்துகள் ஏற்க முடியாதவை என்றும் அவர் தெரிவித்தார்.

”எதிர்க்கட்சியினர் கடுமையான அரசியல் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் பெண்களை குறிவைத்து பேசுவது தவிர்க்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும், மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

By admin