சென்னையில் நடைபெற்று வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம்- தெற்கு மண்டலம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முதல் நாளில் 385 ரன்கள்
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் கிழக்கு மண்டலம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய கிழக்கு மண்டல அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் 72 ரன்களும், மற்றொரு வீரர் வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களும் சேர்த்தனர்.
ஷிகர் மோகன் சிறப்பாக விளையாடி 120 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தார். கேப்டன் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். அவர் 122 பந்துகளில் சதம் விளாசினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் கிழக்கு மண்டலம் 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்திருந்தது. இஷான் கிஷன் 111 ரன்களுடனும், குஷக்ரா 63 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.