• Fri. May 1st, 2026

24×7 Live News

Apdin News

‘சமஸ்கிருதத்தில் 52, தமிழில் 247 எழுத்துக்கள்’ – சபரிமலை வழக்கில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசியபோது என்ன நடந்தது?

Byadmin

May 1, 2026


சபரிமலை, இந்து கோவில்கள், சமஸ்கிருதம், தமிழ், உச்ச நீதி​மன்றம்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கேரளத்தின் சபரிமலை​ கோவிலில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த 2018 தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது சமஸ்கிருதம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சில வாதங்களும், அப்போது தமிழை குறிப்பிட்டு நீதிபதி அளித்த கருத்துகளும் கவனத்தை ஈர்த்துள்ளன.

உச்ச நீதி​மன்றம் அளித்த தீர்ப்பு

கேரளம் மாநிலத்தின் சபரிமலைக் கோவிலுக்குள் மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் நுழைவதைத் தடுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அந்த அமர்வில் அங்கம் வகித்தனர்.

பழக்க வழக்கங்களும் நடைமுறையும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டுமென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கினர்.

By admin