• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

‘சித்தப்பா இறந்ததை அறிந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பியவர் மனைவி, குழந்தைகள் கண் முன்னே கொலை’

Byadmin

Sep 3, 2026


சின்னா

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, சின்னா

    • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், தற்போது ஆந்திராவின் குண்டூர் நகரில் உள்ள நகரம்பாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நகரம்பாளம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் பிபிசியிடம் தெரிவித்த தகவலின்படி, குண்டூர் நகரில் உள்ள கொன்ட வெங்கடப்பையா காலனியைச் சேர்ந்த பெந்திர வெங்கண்ணா என்ற சின்னா, அந்தப் பகுதியில் வசித்து வந்தார்.

அதே காலனியைச் சேர்ந்த புல்லையாவுடன் சின்னாவுக்கு தனிப்பட்ட முன்விரோதம் இருந்துள்ளது. இந்தச் சூழலில், 2006-ஆம் ஆண்டு புல்லையா கொலை செய்யப்பட்டபோது, அந்தக் கொலையில் சின்னாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து, சின்னா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அந்த வழக்கில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

By admin