• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

சுவாமி நாராயண் பிரிவு துறவிகள் பெண்களிடம் ஒரு இடைவெளியை கடைபிடிப்பது ஏன்?

Byadmin

Sep 13, 2026


பாரிஸில் உள்ள செய்ன் (Seine) நதியில் நடைபெற்ற ஒரு சமய ஊர்வலத்துக்கு முன்னதாக, சுவாமிநாராயண் சன்ஸ்தா BAPS-ஐச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஈஃபிள் கோபுரத்துக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சமய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், Kenzo TRIBOUILLARD / AFP via Getty Images

படக்குறிப்பு, பாரிஸில் உள்ள செய்ன் (Seine) நதியில் நடைபெற்ற ஒரு சமய ஊர்வலத்துக்கு முன்னதாக, சுவாமிநாராயண் சன்ஸ்தா பிஏபிஎஸ்-ஐச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஈஃபிள் கோபுரத்துக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சமய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, பரந்துபட்ட சுவாமிநாராயண் சமயப் பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பில் பெண்களின் பங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த சமயப் பிரிவு சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. இதை சுவாமிநாராயண் என்பவர் நிறுவினார். உத்தரப் பிரதேசத்தில் கன்ஷ்யாம் பாண்டே என்ற பெயரில் அவர் பிறந்தார்.

சுவாமிநாராயண் பிரிவைப் பின்பற்றுபவர்கள் அவரை ‘கடவுள்’ என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் சர்ச்சை, பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சமயப் பிரிவின் மரபுகளை மீண்டும் விவாதத்துக்குக் கொண்டு வந்துள்ளது. சுவாமிநாராயண் பிரிவின் மத நூல்களில் பெண்கள் குறித்து உண்மையில் என்ன கூறப்பட்டுள்ளது, துறவிகள் ஏன் பெண்களிடம் இருந்து இடைவெளியைப் பேணுகின்றனர் என்பது உள்ளிட்ட சில கேள்விகளை பிபிசி ஆராய்ந்தது.

சுவாமிநாராயண் கோயில்களுக்கு வழக்கமாகச் செல்லும் பக்தர்களின் கூற்றுப்படி, ஆசீர்வாதம் பெறுவதற்காக பெண்கள் துறவிகளின் காலில் விழுந்து வணங்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விவகாரம் குறித்து பிஏபிஎஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரிடம் பிபிசி பேச முயன்றது. ஆனால், அவர் இந்த விவகாரம் குறித்து பேச மறுத்துவிட்டார்.

By admin