• Sat. Aug 15th, 2026

24×7 Live News

Apdin News

செங்கோட்டையில் தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ முதன் முறையாக ஒலித்ததன் முக்கியத்துவம் என்ன?

Byadmin

Aug 15, 2026


 பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், @BJP

படக்குறிப்பு, இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. புதுடெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில், 80 ஆண்டுகால பாரம்பரியத்தில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடப்படுவதற்கு முன்பு, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்பட்டது.

செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் மோதி, “சுதந்திரத்துக்குப் பிறகு செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவது இதுவே முதல் முறை” என்று கூறினார்.

‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவத்துக்கும் தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. 80-வது சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நாட்டு மக்களுக்கான உரைக்கு முன்பும், உரையின் முடிவிலும் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டது.

இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது.

By admin