• Thu. Jun 25th, 2026

24×7 Live News

Apdin News

செல்போனில் பேசிக்கொண்டே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை- போலீசார் தீவிர விசாரணை

Byadmin

Jun 25, 2026


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் சின்னராசு (35). இவர் நேற்று இரவு திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் செல்வதற்காக அரசு பஸ் ஏறி பயணம் செய்து உள்ளார். அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த அவர் மறுமுனையில் இருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

பஸ்சிலிருந்து குதித்தார்

இந்நிலையில் நல்லூர் அருகே கவுண்டிபாளையம் அருகே பஸ் பரமத்திவேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென சின்னராசு ஓடும் பஸ்சில் இருந்து குதித்துள்ளார். இதனை பார்த்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் உடனடியாக கீழே இறங்கி 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சின்னராசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

By admin