2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் பிரகாரம் தகுதியுடையோர் தமது வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான வெளிப்படுத்தலை ஜூன் 30ஆம் திகதிக்குள் மத்தியமயப்படுத்தப்பட்ட இலத்திரனியல் முறைமை ஊடாக முன்வைக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்குள் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தாவிடின் தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளாக நேரிடும் என்றும் அறிவித்துள்ளது.
The post ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் appeared first on Vanakkam London.