• Sun. Jun 7th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன் தந்தது?

Byadmin

Jun 7, 2026


சிஜேபி, அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தர், காக்ரோச் ஜனதா கட்சி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே வருகையைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டம் சனிக்கிழமை (ஜூன் 6, 2026) இரவு வெகுநேரம் கழித்தே முடிவுக்கு வந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சனிக்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்த அபிஜித் தீப்கே, விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாகத் தேர்வெழுதிய பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதால் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி காவல்துறையிடமிருந்து காக்ரோச் ஜனதா கட்சி அனுமதி பெற்றுள்ளதாக அவர் சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்திருந்தார்.

காக்ரோச் ஜனதா கட்சி ஒரு இணையவழி பகடி இயக்கமாகவே தொடங்கியது.

By admin