• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி: சிஜேபி கட்சியினர் மீது அதிரடிப் படை தடியடி, கைகலப்பு – என்ன நடக்கிறது?

Byadmin

Jul 20, 2026


சிஜேபி போராட்டம், தடியடி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) இன்று பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்ட காணொளி ஒன்றில் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு விரைவு அதிரடிப் படையினர் (ஆர்.ஏ.எஃப்) தடிகளைப் பயன்படுத்துவது பதிவாகியுள்ளது.

இவை போக காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட காணொளிகளும் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஜந்தர் மந்தரில் வன்முறையான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என டெல்லி காவல்துறை மறுத்துள்ளது.

சிஜேபி போராட்டம், தடியடி

பட மூலாதாரம், ANI

வன்முறை குற்றச்சாட்டுகளை மறுத்த டெல்லி காவல்துறை

இது தொடர்பாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சில ஊடகங்கள் ஜந்தர் மந்தரில் டெல்லி காவல்துறையால் வன்முறை/தடுப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதாக செய்தி வெளியிடுகின்றன. அத்தகைய எந்தச் சம்பவங்களும் நடைபெறவில்லை. போராட்டம் முறையாக கையாளப்படுகிறது. இத்தகைய வதந்திகளுக்கு இரையாகாமல் சம்பவ இடத்தில் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பராமரிக்க டெல்லி காவல்துறைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin