பிபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டி, வழக்கமான ஆட்ட நேரத்தில் கோல் ஏதும் அடிக்கப்படாமல் சமநிலையில் முடிந்ததால், கூடுதல் நேரத்திற்குச் சென்றது.
கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில், ஸ்பெயின் வீரர் ஃபெர்ரான் டோரஸ் அடித்த ஒரு அற்புதமான கோல் மூலம் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
VAR மறுபரிசீலனைக்குப் பிறகு அந்த கோல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
போட்டியின் 90+3-வது நிமிடத்தில், அர்ஜென்டினா நடுக்கள வீரர் என்சோ ஃபெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை (சிவப்பு அட்டை) பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.
இதன் விளைவாக, கூடுதல் நேரம் முழுவதும் அர்ஜென்டினா 10 வீரர்களுடன் விளையாட வேண்டியிருந்தது.
லியோனல் மெஸ்ஸி பலமுறை முயன்றபோதிலும், அர்ஜென்டினா அணியால் ஸ்பெயின் அணியின் தடுப்பாட்டத்தையும் கோல்கீப்பரையும் கடந்து செல்ல முடியவில்லை.
2010-ல் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின், 16 ஆண்டுகளில் தனது இரண்டாவதுபிபா உலகக் கிணத்தை வென்றது.
The post 16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது appeared first on Vanakkam London.