மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் சொந்தத் தந்தையாலேயே 10 ஆண்டுகளாக சிறுமி பாலியல் வன்கொடுக்குக்கு ஆளாகி வந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வரும் 55 வயது நபர் தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். இவரின் மனைவி பல ஆண்டுகள் முன்பே பிள்ளைகளை கைவிட்டு சென்றுவிட்டார்.
மூன்று குழந்தைகளில் கடைசி குழந்தையான 17 வயது சிறுமி தனது 7 வயது முதல் தந்தையால் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார்.