• Fri. Sep 18th, 2026

24×7 Live News

Apdin News

தனது 8 வயது மகனை கொல்லப் போவதாக சாட்ஜிபிடி-யிடம் கூறிய நபர் – அடுத்து என்ன நடந்தது?

Byadmin

Sep 18, 2026


மகனைக் கொல்ல விரும்புவதாக சாட்ஜிபிடியிடம் கூறிய நபர் கைது

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லாரா டினிஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்த செய்தியில் வன்முறை மற்றும் தற்கொலை தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

“என்னையும் என் மகனையும் கொன்றுவிடுவதற்கு ரூ.50,000 கொடுக்க முன்வந்தேன். ஆனால், அதில் ஒரு குழந்தை சம்பந்தப்பட்டிருந்ததால் அவர் மறுத்துவிட்டார்.”

“மக்களைக் கொல்ல வேண்டும் என்ற இந்த ஆசை எங்கிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். மற்றொரு நபர் வேதனைப்படுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் உணர்வு எனக்குப் பிடிக்கும்.”

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக, பிரேசிலைச் சேர்ந்த ஒரு விவசாயி சாட்ஜிபிடியுடன் இவ்வாறான தகவல்களையும், பிற செய்திகளையும் பரிமாறிக்கொண்டார். இதில் தனது 8 வயது மகனைக் கொல்வது, மற்றவர்களைத் தாக்குவது, பின்னர் தற்கொலை செய்துகொள்வது ஆகியவற்றுக்கான திட்டங்கள் இருந்ததாக காவல்துறை கூறுகிறது.

பிபிசி நியூஸ் பிரேசில் பார்த்த இந்தச் செய்திப் பரிமாற்றங்கள் தான் அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்தன.

By admin