• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி வசூலித்ததாக புகார் – சோதனை பற்றி அன்பில் மகேஷ் கூறியது என்ன?

Byadmin

Sep 16, 2026


தனியார் பள்ளிகள், பள்ளிக்கல்வித் துறை, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக

பட மூலாதாரம், Anbil Mahesh Poyyamozhi/Facebook

படக்குறிப்பு, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் திருச்சியில் அன்பில் மகேஷுடன் தொடர்புடைய நான்கு இடங்களிலும், அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்குடன் தொடர்புடைய இரண்டு இடங்களிலும் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது.

திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஷின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டனர்.

இந்த வழக்கு எப்படித் தொடங்கியது?

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

By admin