4
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தமிழகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள தமிழக முதல்வர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி நீங்கள் பேசினீர்கள் வெறுப்பு மற்றும் பழைய காயங்களின் மீது மட்டுமே கட்டப்பட்ட சமூகங்கள் இறுதியில் தனித்துவிடப்படும் என்பதையும்; அதே நேரத்தில் நீதி மற்றும் சகவாழ்வின் மீது கட்டப்பட்ட சமூகங்களே மக்கள் உண்மையாக வாழ விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கும் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.
உலகம் ஏற்கனவே பிரிவினைகளால் நிறைந்துள்ளது. நம் பிராந்தியத்தில் உள்ள மக்கள் அனைவரும் மொழி, மதம் அல்லது அடையாளம் கடந்து உண்மையாக எதிர்பார்ப்பது சமூக முன்னேற்றம், நீதி மற்றும் நிலையான தன்மையையே ஆகும். நம்மைப் பிரிக்கும் விடயங்களை விட, நம்மிடையே உள்ள பொதுவான பண்புகளும் ஒற்றுமைகளும் மிக அதிகம்.
இந்தப் புதிய அத்தியாயம் முன்னேற்றத்தையும், கருணையையும், கடந்த காலத்தில் மற்றவர்கள் இடைவெளியை உருவாக்கிய இடங்களில் புரிதலை ஏற்படுத்துவதற்கான ஆற்றலையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.