• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து விஜய் அரசின் தீர்மானத்துக்கு விமர்சனங்கள் எழுவது ஏன்?

Byadmin

Aug 10, 2026


சட்டப்பேரவை

பட மூலாதாரம், Youtube/DIPR

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

‘கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நிறைவேறியது.

முன்னதாக, ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக பாடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தால் தான் நிலைத்திருக்கும்’ என தி.மு.க கூறியுள்ளது. இதே கருத்தை அரசியல் விமர்சகர்களும் முன்வைக்கின்றனர்.

த.வெ.க அரசின் தீர்மானத்தால் என்ன நடக்கும்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமையன்று பேரவை தொடங்கியதும் தனித் தீர்மானம் ஒன்றை த.வெ.க அரசு கொண்டு வந்தது.

By admin