• Fri. May 1st, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் இறுதி சடங்குகளுக்கு தனிச் சட்டம் – நீதிமன்ற கருத்துக்கு எதிர்வினை என்ன?

Byadmin

May 1, 2026


 தமிழ்நாட்டில் இறுதி சடங்குகளுக்கு தனிச் சட்டம் - நீதிமன்ற கருத்துக்கு எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இறுதிச் சடங்குகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

‘இறுதிச் சடங்குகளை நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்கீழ் வரும் வாழ்வதற்கான உரிமையின் (right to life) ஒரு பகுதியாக இருந்தாலும் அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது’ என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் இறுதி ஊர்வலம் ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு தனிச்சட்டம் அவசியமா?

திருப்பரங்குன்றம், ஆலங்குளம் கிராம சாலையில் கடந்த மார்ச் 6-ஆம் தேதியன்று இறுதி ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரியின் வாகனம், சாலையைக் கடப்பதற்கு முயற்சி செய்துள்ளது. இதனை எதிர்த்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

By admin