• Sun. Jun 14th, 2026

24×7 Live News

Apdin News

தற்செயலான விபத்து அல்ல, திட்டமிட்ட சதி! டெல்லி தீ விபத்து வழக்கில் 3 பேர் கைது!!

Byadmin

Jun 14, 2026


அந்த சிறுமிக்கு சரிதா (27) என்ற பெண் பெட்ரோல் மற்றும் தீப்பெட்டியை கொடுத்து உதவியதாகவும் தெரியவந்தது.

இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் முக்கியக் குற்றவாளியான நிரஞ்சன் (33) மற்றும் அவரது தம்பி ராஜ்குமார் (27) ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் பழிவாங்கும் நோக்கில் சிறுமியைப் பயன்படுத்தி இந்தச் செயலைச் செய்ய தூண்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபரீதமான விளைவு..

சிறுமியின் இலக்கு தீபக்கின் பைக் மட்டுமே என்றாலும், நள்ளிரவில் பைக்கில் வைக்கப்பட்ட தீ, எதிர்பாராதவிதமாக கட்டிடம் முழுவதும் பரவி, அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் கொடூர சம்பவமாக முடிந்தது.

உயிரிழந்தவர்களுக்கும் அந்தச் சிறுமிக்கும் எந்தப் பகையும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் இந்த வழக்கை பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் சதித்திட்டம், கொலைக் குற்றமாகாத மரணம் விளைவித்தல், தீவைப்பு உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் மாற்றிப் பதிவு செய்துள்ளனர்.

சிறுமி சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட நிலையில், சரிதா, நிரஞ்சன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

By admin