• Sun. Jun 14th, 2026

24×7 Live News

Apdin News

மம்தா பானர்ஜி காங்கிரஸில் இணைந்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விடுமா அல்லது அக்கட்சி தொடர்ந்து இயங்குமா?

Byadmin

Jun 14, 2026


மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மம்தா பானர்ஜி தற்போது தனது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த சில நாட்களிலேயே, புது டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தின் போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்புகளுக்குப் பிறகு, மம்தா பானர்ஜி தனது சக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் காங்கிரஸுடன் இணையக்கூடும் என்ற யூகங்கள் தீவிரமடைந்துள்ளன.

இருப்பினும், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே இந்த இணைப்பு குறித்த செய்திகள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளன.

ஆனால், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த அரசியல் நகர்வுகளை உற்று நோக்குபவர்கள், ஒருவேளை இந்த இணைப்பு பேச்சுவார்த்தை உண்மை இல்லை என்றால், மேற்கு வங்கத்தில் தனது கட்சியில் வளர்ந்து வரும் கிளர்ச்சிக்கு மத்தியிலும் மம்தா மூன்று நாட்கள் டெல்லியில் தங்கியிருக்க மாட்டார் என்று வாதிடுகின்றனர்.

By admin