இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஏற்புடையதல்ல
புதுச்சேரியைச் சேர்ந்த ஆண் ஒருவர் வெளிமாநில பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவர்களது குழந்தைகளுக்கு புதுச்சேரி பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டுப் பலன்கள் வழங்கப்படுகின்றன.
அதேநேரம், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவர்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ், இடஒதுக்கீடு வங்குவது இல்லை. இது பாலினம் அடிப்படையிலான வேறுபாடாக கருதப்படுகிறது.