கடந்த மே 29 அன்று சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த குர்விந்தர் சிங், அங்கு சென்று சிறுமியை கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, சிறுமியின் சடலத்தை ஒரு பெரிய சூட்கேசில் அடைத்துள்ளார். பின்னர், அந்த சூட்கேஸை தனது பைக்கின் பின்னால் கட்டிக்கொண்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று அதை தீ வைத்து எரித்துள்ளார்.
அவர் அளித்த தகவல் அடிப்படையில் காட்டுப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்த காவல்துறையினர் சிறுமியின் எலும்புக்கூட்டின் எச்சங்களை மீட்டனர். அவை டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.