பட்டாயா நகரம்
சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் பாலியல் தொழிலாளர்களை கைது செய்து வருகின்றனர். தற்போது வரை சந்தேகத்திற்குரிய வகையில் 40 முதல் 50 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொழிலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினம் என்று பட்டாயா காவல் துறைத் தலைவர் அனெக் ஸ்ரதோங்யூ கூறினார். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம், ஆனால் இது கடினமானது என்றார்.
அதிகாரிகளுக்கு தெரியாமலேயே பாலியல் தொழிலாளர்கள் பொது இடங்களில் வாடிக்கையாளர் ஆகக்கூடியவர்களை அணுக முடியும் என்று எச்சரித்தார்.
அமெரிக்க வீரர்கள் ஒருநாளைக்கு 30 முதல் 91 டாலர் வரை செலவழிக்க வாய்ப்புள்ளது. இது குறுகிய காலத்தில் பட்டாயா நகரின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.