• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ கடந்தது – மீட்பு பணிகளில் தொடர் சிக்கல்

Byadmin

Sep 2, 2026


மருத்துவ பொருட்கள் பற்றாக்குறை:

உயிரிழந்தவர்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டால் உடல்களை மீண்டும் தோண்டி எடுக்க ஏதுவாக, டிஎன்ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு அடக்க இடமும் கவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாளத்தில் பலர் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முன்வருகின்றனர்; காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பலர் ரத்த தானம் செய்து வருகின்றனர். ரத்த இருப்பு குறைந்து வருவதாகவும், கூடுதல் தானங்களை மருத்துவமனை கோருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவ பொருட்களும் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல்லையின் சீனப் பகுதியில், 16 பேர் உயிரிழந்ததாகவும், 540-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 65,000 பேருக்குத் தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மைப் பராமரிப்பு தொடர்பான உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், சுமார் 10,500 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து உதவி தேவைப்படுவதாகவும், 5 வயதுக்குட்பட்ட 2,600 குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான (severe wasting) சிகிச்சை தேவைப்படலாம் என்றும் அவர் கூறினார்.

By admin