• Mon. Apr 20th, 2026

24×7 Live News

Apdin News

திருச்சியில் ஷார்ட்ஸ் அணிந்து மாணவ, மாணவிகள் போராட்டம் ஏன்?துணைவேந்தரின் ‘சர்ச்சை’ கருத்து என்ன?

Byadmin

Apr 20, 2026


மாணவிகள் ஷார்ட்ஸ் அணிவது குறித்து துணைவேந்தரின் 'சர்ச்சை' கருத்து - மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு

பட மூலாதாரம், Handout

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் மாணவ பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், துணைவேந்தர் “மாணவிகள் ‘ஷார்ட்ஸ்’ அணிவது மற்றவர்கள் அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கான ‘அழைப்பாக இருக்கும்’ என கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் பெருமளவில் போராட்டம் நடத்தினர்.

கடும் எதிர்ப்பு எழவே, “மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவே தான் கருத்து கூறியதாகவும் அக்கல்வி நிறுவனம் கிராமத்திற்குள் இருப்பதால் அதற்கேற்றாற் போல் உடையணிய வேண்டும் என்ற பின்னணியிலேயே அவ்வாறு கூறியதாகவும்” துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், அவருடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என மாணவர்கள் கூறுகின்றனர். என்ன நடந்தது?

என்ன நடந்தது?

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி வகுப்பு பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில், துணைவேந்தர் வி.நாகராஜ் உள்ளிட்டோரும் கல்லூரி பணியாளர்கள், மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது, மாணவிகள் ‘ஷார்ட்ஸ்’ அணிவது கல்லூரி பணியாளர்கள் உட்பட்டோருக்கு ‘கவனச்சிதறலை” ஏற்படுத்தும் என்றும் அது “பாலியல் துன்புறுத்தலுக்கான அழைப்பாக” இருக்கும் என்றும் துணைவேந்தர் நாகராஜ் கூறியதாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

By admin