• Sun. Aug 30th, 2026

24×7 Live News

Apdin News

துட்டன்காமன் கல்லறை: ஒரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் விலகாத மர்மங்கள்

Byadmin

Aug 30, 2026


துட்டன்காமன் கல்லறை

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், கிரெக் ஹோக்விட்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1936ஆம் ஆண்டு பிபிசி ஆவணக் காணொளி ஒன்றில், தொல்லியல் ஆய்வாளர் ஹோவர்ட் கார்டர், 1924 பிப்ரவரி 12ஆம் தேதி தானும் தனது குழுவினரும் 3,300 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் எகிப்திய மன்னரை முதன்முறையாகச் சந்தித்த தருணத்தை விவரிக்கிறார்.

“நாங்கள் நின்றுகொண்டிருந்த தரையில் மனித கால்கள் கடைசியாகப் பதிந்ததிலிருந்து 33 நூற்றாண்டுகள் கடந்திருந்தன. இருந்தபோதிலும், சமீபத்தில் அங்கு மனிதர்கள் இருந்ததற்கான தடயங்கள் எங்களைச் சுற்றிலும் காணப்பட்டன.”

சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹோவர்ட் கார்டரின் தெளிவான ஆங்கிலக் குரல், ஒரு பழங்காலப் பொருளைப் போல ஒலிக்கிறது. 1936ஆம் ஆண்டு பிபிசி வானொலியில் அவர் பேசியபோது, ஏராளமான புதையல்கள் நிறைந்த துட்டன்காமன் கல்லறையை அவர் முதன்முதலில் கண்டுபிடித்து 14 ஆண்டுகள் கடந்திருந்தன.

அந்த இளம் மன்னரின் கல்லறை எந்தவித சேதமும் இல்லாமல் இருந்ததை கார்டரும் அவரது நிபுணர் குழுவினரும் கிட்டத்தட்ட அதிசயமாகக் கண்டுபிடித்தது அவரை உலகப் புகழ்பெற்றவராக்கியது.

பண்டைய எகிப்து மீது பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. 1924ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகளைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், அந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி துட்டன்காமனின் சார்கோபகஸ் எனப்படும் கல் சவப்பெட்டியை அவர்கள் இறுதியாக அடைந்தபோது ஏற்பட்ட விநோதமான உணர்வை விவரித்தார்.

By admin