அந்த மூதாட்டியை கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்க, நேபாள ராணுவத்திற்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி பூரண நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கை குறித்து மூதாட்டியின் கொள்ளு பேரன் தீபக் போஹரா கூறுகையில், எனது மகனும், எனது சகோதரரும் கயிறு வழியாக கீழே இறங்கி மூதாட்டி உயிருடன் இருப்பதை உறுதி செய்ததாக கூறினார்.
மேலும் எனது பாட்டி போரில் வெற்றி பெற்று திரும்பும் ஒரு போர்வீரனை போல காட்சியளித்ததாகவும் அவரின் கொள்ளுப் பேரன் கூறினார்.