
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தூத்துக்குடி அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் என்பவர் குற்றவாளி என தீர்ப்பளித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, இரட்டை தூக்கு தண்டனை விதித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள கிராமம் ஒன்றில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி காவல்நிலையத்தில் பிளஸ்டூ மாணவியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்தனர். சம்பவம் நடந்த நாளில் மாலை 6 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்கச் செல்வதாகக் கூறி அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற அந்த மாணவி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பது அவரது புகார்.
காவல் துறையினர் இந்த புகார் தொடர்பாக அலட்சியமாக பதில் அளித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அந்த சமயத்தில் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், மார்ச் 11-ஆம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் கடந்த மார்ச் 16 அன்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
