• Thu. Aug 20th, 2026

24×7 Live News

Apdin News

தொகுதி மறுவரையறை: ஒரே வாரத்தில் முதல்வர் விஜயின் நிலைப்பாட்டில் மாற்றமா?

Byadmin

Aug 20, 2026


தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் உண்மையான நிலைபாடு என்ன என அரசியல் கட்சிகள் கேள்வி?

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், ப.சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என தெரிவித்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்பதற்கான சட்டபூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் நிலைப்பாடு என்ன என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன

ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இதற்கான  தீர்மானத்தை கொண்டுவந்தார்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார்

தொகுதி மறுவரையறை தீர்மானத்தில் என்ன உள்ளது?

தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

By admin