• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு – தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய்

Byadmin

May 13, 2026


தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN Assembly

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது )

தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள நிலையில் ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் தலைவர்கள் தீர்மானத்தின் மீது பேசி வருகின்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு ஏன்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.

பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு மே 10 அன்று விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

By admin