நாகலட்சுமியின் இந்த தொழில் ஆர்வம் அவரை ஆன்லைன் மூலமாக சேலை வியாபாரத்திலும் தள்ளியது. இன்றைய பெண்கள் மத்தியில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நாகலட்சுமி இணைந்தார்.
நங்கநல்லூர் ஸ்ரீசாய் சில்க்ஸ் ரெடிமேட் சேலைகள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி அதன் மூலமாக தினமும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
இன்றைய இளம் தலைமுறை பெண்கள் பலர் சேலை உடுத்துவதை மறந்து போய் இருக்கும் நிலையிலும் சந்தைகளில் ரெடிமேட் சேலைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி தனது கடைகளில் ரெடிமேட் சேலைகளை அதிகளவில் நாகலட்சுமி விற்பனை செய்து வந்து உள்ளார்.
இது தொடர்பான வீடியோக்கள் மூலம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலைகளை கட்டுவது எப்படி? தைப்பது எப்படி? என்பதை சொல்லி கொடுத்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நாகலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3½ லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்த்து நங்கநல்லூர் மற்றும் அண்ணாநகர் கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான சேலைகளை தேர்வு செய்தனர்.
இதன் மூலம் சேலை விற்பனையில் நாகலட்சுமிக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதை வைத்து 2 மகன்களையும் அவர் நன்றாக படிக்க வைத்துள்ளார்.