0
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை சந்தித்திருக்கிறார். அத்துடன் அவர்களுக்கு ஆயுள் காப்பீடும் வழங்கி.. இந்திய திரையுலகினரின் பிரத்யேக கவனத்தை கவர்ந்திருக்கிறார்.
தமிழகத்தில் திரையுலக நட்சத்திர நடிகர்களுக்கான ஆதரவை ரசிகர்கள் திரைப்படத் துறையைக் கடந்து அரசியல் – அதிகாரம் ஆகியவற்றிற்கும் அளித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தமிழ் ரசிகர்களைப் போலவே தெலுங்கு ரசிகர்களும் தங்களின் மனம் கவர்ந்த நட்சத்திர நடிகர்களை திரையுலகைக் கடந்து அரசியல் -அதிகாரத்திற்கும் ஆதரவு அளித்திருக்கின்றனர். இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் மறைந்த ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநில முதல்வரான என்.டி. ராமா ராவ். இவர் தொடங்கிய தெலுங்கு தேசக் கட்சி தான் தற்போது ஆந்திர பிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சி. ஜோசப் விஜய் போல் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார் அல்லு அர்ஜுன். இதற்கு அச்சாரமாகத்தான் தமிழ் நாடு – தெலுங்கானா – ஆந்திர பிரதேசம் – கேரளம் – கர்நாடகா – ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை ஒன்றிணைத்து மிகப்பிரமண்டமான அளவில் ரசிகர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி இருக்கிறார்.
தொடக்கத்தில் இது சாதாரண ரசிகர்கள் சந்திப்பு என்பதாக இருந்தாலும்… வருகை தந்த ரசிகர்களிடம் தங்கள் பகுதியில் நற்பணி மன்றம் – மக்கள் இயக்கம் – போன்ற அமைப்பை தொடங்குங்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது அரசியலை நோக்கிய பயணத்தின் முதல் அடி என அல்லு அர்ஜுனின் ரசிகர்களும் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளனர்.
இதனிடையே நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூலம் சர்வதேச அளவிலான கவனத்தை கவர்ந்தவர் என்பதும், தற்போது, தமிழ் திரைப்பட இயக்குநர்களான அட்லீ இயக்கத்தில் ராக்கா எனும் படத்திலும், இயக்குநுர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.