0
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் (Nottingham) நகர மையத்தில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளதுடன், லேஸ் மார்க்கெட் சதுக்கத்தை மூடியுள்ளனர்.
அத்துடன், ஆடம்ஸ் வாக் ( Adams Walk ) வீதியிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரை ஒரு இளம் பெண் என்று மட்டுமே விவரிக்கும் பொலிஸார், அவருக்கு அதிகாரிகள் உதவி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.