• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

நாட்டின் வளர்ச்சியில் வாகன தொழில் துறை முக்கிய தூணாக மாற வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

Byadmin

Sep 4, 2026


பொருளாதா வளர்ச்சியில் பங்கு:

நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் விரைவான விரிவாக்கம், மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, வாகன தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று மோடி சுட்டிக்காட்டினார்.

“மேம்பட்ட இணைப்பு வசதிகளும், திறமையான தளவாட போக்குவரத்தும் செலவுகளை குறைத்து, இந்திய உற்பத்தி துறையை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக ஆக்குகின்றன. இது வாகன துறையை வலுப்படுத்தி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது,” என்று அவர் கூறினார்.

தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்து சூழலை நோக்கிய பயணத்தில் இந்தியாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“சார்ஜிங் உள்கட்டமைப்பின் விரைவான விரிவாக்கம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு, புத்தாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது,” என்று பிரதமர் கூறினார்.

By admin