அரசியல் ரீதியாகத் தம் மீது போடப்படும் வழக்குகள் குறித்தும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றிய அவர், ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளுக்கு திமுக அஞ்சாது என்றும், சட்டத்துறையின் துணை கொண்டு அனைத்துப் பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறியடிப்போம் என்றும் உறுதியளித்தார். உதயநிதி ஸ்டாலின் தனது வழக்கமான பாணியில் கிண்டலாகவும் சுவாரஸ்யமாகவும் பேசிய இந்த உரை, இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.