2012-ம் ஆண்டு வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான ஷிவ் பண்டிட். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷிவ் பண்டிட் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “தமிழ் சினிமா எனக்கு மிகவும் நெருக்கமானது. லீலை மூலம் கிடைத்த அன்பை என்னால் மறக்கவே முடியாது.
சிக்மா மூலம் கோலிவுட்டில் எனது பயணத்தின் புதிய அத்தியாயம் தொடங்கும் என நம்புகிறேன். ஜேசன் சஞ்சய் போன்ற தெளிவான பார்வை கொண்ட இளம் இயக்குநருடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம்” என்றார்.