5000 பேர் மாயம்:
அவசரகால மீட்புக் குழுக்கள் 12,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டிருந்தாலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுமார் 5,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
“எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, 275 இந்தியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர். நாங்கள் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். இது தொடர்பாக நேபாள அதிகாரிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்,” என்று ஜெய்ஸ்வால் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தொடர்ந்து பேசும் போது, “சீனாவின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, சீனாவின் திபெத் பகுதியில் இந்திய பயணிகள் யாரும் இல்லை. நேபாள அரசாங்கம் கோரியுள்ள கூடுதல் தடயவியல் உபகரணங்கள், பெய்லி பாலங்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்,” என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.