• Fri. May 22nd, 2026

24×7 Live News

Apdin News

பிரகீத் எக்னெலிகொட வழக்கு | மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

Byadmin

May 22, 2026


ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று (21) மீண்டும் கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலக்கம் 121ன் கீழ் ஒன்று, விஜயராம வீதி, கொழும்பு 7இல் அமைந்துள்ள புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றில் நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான நீதிபதி நலின் ஹேவாவசம் மற்றும் நீதிபதி லக்மாலி ஹேவாவசம் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இந்த விசாரணைகள் இன்று நடந்தன.

இதன்போது சாட்சியாளர்கள் 5 பேர் நீதிமன்றத்துக்கு இன்று சாட்சியம் அளிக்க வரவழைக்கப்பட்டிருந்தனர்.

By admin