• Sat. Jul 25th, 2026

24×7 Live News

Apdin News

பூமியைப் போல வளிமண்டலம் கொண்டிருக்கும் புறக்கோள் – உயிர்கள் வாழ முடியுமா?

Byadmin

Jul 25, 2026


பூமியை போல் உயிர்கள் வாழ உதவும் வளிமண்டலம் கொண்ட புறக்கோள் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Melissa Weiss/Center for Astrophysics |Harvard & Smithsonian

தொலைதூர நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வரும், பூமியைப் போன்ற பாறைத் தன்மை கொண்ட கோள் ஒன்றின் வளிமண்டலத்தை விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்த புறக்கோள், அது சுற்றி வரும் நட்சத்திரத்தில் இருந்து உயிரினங்கள் வாழத் தகுந்த மண்டலத்தில் (habitable zone) அமைந்துள்ளது.

நமது சூரிய குடும்பத்திற்கு அப்பாலும் பூமியைப் போன்ற உயிர்கள் வாழ ஏதுவான சூழலைக் கொண்ட கோள் இருக்கக்கூடும் என்பதற்கு இதுவரை கிடைத்துள்ள மிக வலுவான சான்று இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த புறக்கோளின் வளிமண்டலத்தில் ஹீலியம் வாயு இருக்கிறது. ஹீலியம் வாயு மட்டுமே உயிர்களுக்கான ஆதாரமாக அமையாது என்றாலும், அதன் வளிமண்டலத்தில் வேறு வாயுக்களும் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரான ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் கால்லின் செருபிம், இந்தக் கண்டுபிடிப்பை “மிகவும் முக்கியமானது” என்று விவரித்தார்.

“சூரியனல்லாத மற்றொரு நட்சத்திரத்தின் உயிரினங்கள் வாழத் தகுந்த மண்டலத்தில் இருக்கும் பாறைத்தன்மை கொண்ட ஒரு கோளில் வளிமண்டலம் இருப்பது கண்டறியப்படுவது இதுவே முதல்முறை” என்று அவர் தெரிவித்தார்.

By admin