• Sat. Jul 4th, 2026

24×7 Live News

Apdin News

பூமியை நோக்கி வீழும் ஸ்விஃப்ட் ஆய்வகத்தை காப்பாற்ற நாசா ஆபத்தான முயற்சி – என்ன நடக்கிறது?

Byadmin

Jul 4, 2026


ஸ்விஃப்ட் ஆய்வகம், பூமி, நாசா, செயற்கைகோள்கள்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, ஸ்விஃப்ட் ஆய்வகம் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து, எரிந்து சாம்பலாகும் ஆபத்தில் உள்ளது (விளக்கப் படம்)

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

விண்ணில் ஏவப்படும் செயற்கைகோள்களைப் பொறுத்தவரை, அதன் ஆயுட்காலம் அல்லது பணி முடிந்ததும் இரண்டு விஷயங்கள் நடக்கலாம்.

பூமிக்கு அருகில், அதாவது சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைக்கோள்களைப் பொறுத்தவரை, அவற்றில் மீதமிருக்கும் எரிபொருளைப் பயன்படுத்தி அவற்றின் வேகம் குறைக்கப்படும். இதனால், அவை சுற்றுப்பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்தில் நுழைந்து, எரிந்து சாம்பலாகிவிடும்.

அதேசமயம், தொலைவில் உள்ள செயற்கைக்கோள்கள் அதாவது பூமியிலிருந்து 1,000 கி.மீ.க்கு அப்பால் உள்ள சுற்றுப்பாதைகளில் இருக்கும் செயற்கைக்கோள்கள், இன்னும் வெகு தொலைவிற்கு அனுப்பப்படுகின்றன. அவை 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சுற்றி வரும். இது இன்னும் அதிகமான விண்வெளிக் குப்பைகளுக்கு வழிவகுக்கும்.

செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது ஹப்பிள் தொலைநோக்கி போன்ற ஆய்வகங்கள் கூட விண்ணில் ஏவப்பட்டுள்ளன (1990).

அப்படி, நவம்பர் 2004-இல் நாசா விண்ணில் செலுத்திய நீல் கெரெல்ஸ் ஸ்விஃப்ட் ஆய்வகம் (Neil Gehrels Swift Observatory), இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், இந்த விண்வெளித் தொலைநோக்கி, தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து, எரிந்து சாம்பலாகும் ஆபத்தில் உள்ளது.

By admin