• Sat. May 9th, 2026

24×7 Live News

Apdin News

பெட்ரியா ஆடம்: 12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

Byadmin

May 9, 2026


எத்தியோப்பியா

பட மூலாதாரம், Hiwot Fana Specialised Hospital

எத்தியோப்பியாவின் ஹராரி பகுதியில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த பெண் ஒருவர் அரிதான வகையில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

“ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது,” என்று 35 வயதான பெட்ரியா ஆடம் என்ற அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அவர் நான்கு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஹிவோட் ஃபானா சிறப்பு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

“என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் பிரார்த்தனைகள் நிறைவேறும் வரை மன அழுத்தத்திலும் வேதனையிலும் இருந்தேன்,” என்று பெட்ரியா பிபிசியிடம் கூறினார்.

மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது நூர் அப்துலாஹி, தாயும் குழந்தைகளும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளின் எடை 1.3 முதல் 1.4 கிலோ வரை இருப்பதாகவும் கூறினார்.

By admin