• Thu. Jun 18th, 2026

24×7 Live News

Apdin News

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈடாக அமெரிக்கா இரானுக்கு 300 பில்லியன் டாலரை வழங்குமா?

Byadmin

Jun 18, 2026


போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈடாக  அமெரிக்கா இரானுக்கு 300 பில்லியன் டாலர்களை வழங்குமா?

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புதன்கிழமை அன்று மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டு, தற்போது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக இரு நாடுகளும் பின்னர் உறுதிப்படுத்தின.

    • எழுதியவர், டேனியல் புஷ்
    • பதவி, வாஷிங்டன் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

புதன்கிழமை அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் குறிக்கிறது.

அதே வேளையில், மற்ற அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தொடரும்.

பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நீண்ட செய்தியாளர் சந்திப்பில், இதனைத் தன்னுடைய நாட்டுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகக் குறிப்பிட்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புதன்கிழமை அன்று மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டு, தற்போது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக இரு நாடுகளும் பின்னர் உறுதிப்படுத்தின.

இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல்களின் படி, இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் டிரம்பின் இலக்கை அடைவதற்கான ஒரு விரிவான மற்றும் இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

By admin