• Tue. May 19th, 2026

24×7 Live News

Apdin News

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Byadmin

May 19, 2026


நாளை (19) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒத்திகைகள் இன்று (18) பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்றன.

இதன்போது, முன்னாள் எம்.பி விமல் வீரவங்ச உள்ளிட்ட சுமார் 35 பேர் அடங்கிய குழுவினர், உரிய அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைய முற்பட்டு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது  உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், அவர்களின் முயற்சியை முறியடித்து அங்கிருந்தவர்களை வெளியேற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரவுள்ளதாகப் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

By admin