• Fri. May 22nd, 2026

24×7 Live News

Apdin News

ப்ரீஎக்லாம்ப்சியா: கர்ப்ப காலத்தை நீட்டித்து பேறுகால சிக்கலை தீர்க்கும் சிகிச்சை முறை – ஆய்வில் புதிய தகவல்

Byadmin

May 22, 2026


உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70,000 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் 500,000 குழந்தைகளின் இறப்புகளுக்கு ப்ரீ-எக்லாம்ப்சியா மற்றும் அதிக ரத்த அழுத்தம் தொடர்பான இதர பாதிப்புகள் காரணமாக அமைகின்றன.

பட மூலாதாரம், Maria Patzwald

படக்குறிப்பு, இந்தச் சிகிச்சை முறையின் காரணமாக, மரியா தனது மகன் பென்னட்டை 34 வாரங்களில் பிரசவிக்க முடிந்தது.

    • எழுதியவர், கேட் போவி
    • பதவி, க்ளோபல் ஹெல்த்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“இந்தச் சிகிச்சை மட்டும் இல்லாதிருந்தால், அவர் இன்னும் சீக்கிரமாகவே பிறந்திருப்பார் என்றும், அவரது வாழ்க்கையைத் தொடங்குவது அவருக்கு இன்னும் கடினமாக இருந்திருக்கும் என்றும் நான் நினைக்கிறேன்” என்கிறார் மரியா பாட்ஸ்வால்ட்.

38 வயதான அவர் தனது இரண்டாவது குழந்தையைக் கருத்தரித்த போது, ஆரம்பத்தில் அவருக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை.

“எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அது மாறத் தொடங்கியது” என்று மரியா பிபிசி உலக சேவையிடம் கூறுகிறார்.

பின்னர், 32 வாரம் கர்ப்பமாக இருந்தபோது, மரியாவுக்கு ப்ரீ-எக்லாம்ப்சியா இருப்பது கண்டறியப்பட்டது.

இது அதிக ரத்த அழுத்தத்தால் வகைப்படுத்தப்படும் மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு சிக்கலாகும். அவர் குழந்தையைப் பிரசவிக்கும் வரை மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது.

By admin