அபார பந்துவீச்சு:
194 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணிக்கு தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய மரிகோ ஹில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். கேப்டன் நடாஷா மைல்ஸ் 27 பந்துகளில் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பிறகு களமிறங்கிய யாஸ்மின் 11 ரன்களிலும், கேரி சான் 1 ரன்னிலும், மரினா லாம்ப்லோக் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஹாங்காங் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து 16.2 ஓவர்களில் ஹாங்காங் மகளிர் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், பிரேமா ராவத், நந்தனி ஷர்மா மற்றும் ஸ்ரீசராணி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.