7
நாட்டின் சுகாதார அமைப்பின் முன்னேற்ற ஆய்வை நடத்துவதற்காக வந்த உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர் குழுவிற்கும், சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடயாடலின்போது வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், நாட்டின் சுகாதார சேவை வலையமைப்பை ஒரு வினைத்திறனான மற்றும் மக்கள் சார்ந்த அமைப்பாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதார அமைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இலங்கைக்கு வருகை தந்த உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச நிபுணர் குழு, இன்று (20) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸாவை சந்தித்து, நாட்டின் சுகாதார அமைப்பின் தற்போதைய செயல்பாடு மற்றும் இலங்கையில் முதன்மை சுகாதார அமைப்பை வலுப்படுத்த அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் “ஆரோக்கிய சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள்” திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடியது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ வேண்டுகோளின் பேரில் இந்த நிபுணர் குழு இலங்கைக்கு வருகை தந்து இருந்தது. இன்று முதல் 24 ஆம் தேதி வரை தங்கி, தங்களது ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் நிபுணர் குழுவுடன், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உலக சுகாதார அமைப்பின் இலங்கை நாட்டுக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் அவர்களும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள், ஆயிரம் (1000) “சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவுவதற்கான திட்டம், ஆரம்ப சுகாதார சேவைகளை கணினி மயமாக்கல் திட்டம் மற்றும் அத்திட்டத்தின் வெற்றி மற்றும் சவால்கள் குறித்து தூதுக்குழுவினருக்கு விளக்கினார்.